Monday, February 15, 2010

முதன் முதலாய் ..

வெயில் காலம் முடிந்து
முகத்தில் விழுந்த
முதல் மழைத்துளி ,

வெளிநாட்டு பயணம்
முடித்து உண்ணப் போகும்
அம்மா சமைத்த
முதல் பருக்கைச்சோறு ,


களை மட்டும் விளைந்த நிலத்தில்
கண்டெடுத்த முதல் நெற்கதிர் ,

இறந்துபோன மனதில் பிறந்த
முதல் சினேகம் ,

இவை யாவும் மீறிய
பரவசத்தை உணர்ந்தது ,
நாம் அறிமுகம் கொள்ளாத
முதல் நாளில்
என்மீது படர்ந்த உன் பார்வையில் ..

No comments:

Post a Comment