துளசிச் செடியின் புனிதமாக
அம்மாவின் அன்பு ,
வெயில்கால குடையாக
அப்பாவின் அக்கறை ,
பாடப்புத்தகத்தின் நடுவில்
காமிக்ஸ் புத்தகமாக இனிக்கும்
தங்கையின் சீண்டல் ,
மாண்டு போனாலும்
மீண்டு வந்து பேசும் வரை
இடைவிடாத நண்பனின் தொடர்பு ,
தினசரி தோன்றும்
சிறு சிறு கஷ்டங்களுக்கு நடுவில்,
இவை யாவும் ஒருசேர
அனுபவிக்கும் சொர்க்கம் தான்
"என் வாழ்க்கை .."
No comments:
Post a Comment