Thursday, March 10, 2011

பிரிவு...

உடலில் மட்டும்
உயிர்ப்பு தந்து ,
உயிரைக் கொலைசெய்யும்
நினைவு ...

கடலில் உள்ள
நீர்த்துளிகளின்
எண்ணிக்கையை விட
மனதில் சுரக்கும்
கண்ணீர்த்துளிகளை
அதிகரிக்கச் செய்யும்
உணர்வு...

நிகழ்காலத்திலும்
இறந்தகாலத்தோடு
இணைந்து வாழும்
துயரமான கனவு...

Tuesday, March 8, 2011

பெண்

கருவறையிலிருந்து
கல்லறை வரையிலான
ஆணின் பயணத்திற்கு,
கடவுள் தந்த
வழித்துணை...